search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே மேம்பாலம்"

    • அரசு விரைவு பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன.
    • போதிய உபகரணங்கள் இல்லாததால் பஸ்களை பழுது பார்க்கவும் முடியவில்லை என கூறப்படுகிறது.

    பண்ருட்டி:

    பண்ருட்டி ரெயில்வே மேம்பாலத்தில்நேற்றிரவு அரசு பஸ் பழுதடைந்து நடு வழியில் நின்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    பண்ருட்டி பகுதி வழியாக இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. தொடர்ந்து பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. போதிய உபகரணங்கள் இல்லாததால் பஸ்களை பழுது பார்க்கவும் முடியவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து இருந்து பண்ருட்டி வழியாக சென்னைக்கு செல்லும் அரசு பஸ் ஒன்று நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு வந்தது. அதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி ரெயில்வே மேம்பாலம் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்த போது திடீரெனபழுதானது.

    இதனை தொடர்ந்து நடுவழியில் அரசு பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் தவித்தனர்.

    • வேப்பம்பட்டு-பெருமாள்பட்டு இடையே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    • வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்தபோது தந்தை மற்றும் 2 மகள்கள் ரெயில் மோதி பலியானார்கள்.

    வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே வேப்பம்பட்டு-பெருமாள்பட்டு இடையே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பணி முழுமை அடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்தபோது தந்தை மற்றும் 2 மகள்கள் ரெயில் மோதி பலியானார்கள்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதியில் நிற்கும் மேம்பால பணியை விரைந்து முடிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ரெயில்வே மேம்பாலப்பணியை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்றது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பணியை முடிக்க கூடுதலாக ரூ.24 கோடி 18 லட்சத்து 83 ஆயிரத்து 895 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் வேப்பம்பட்டு ரெயில் நிலைய மேம்பாலம் கட்டும் பணி இன்று பூமி பூஜையுடன் மீண்டும் தொடங்கியது. இதில் பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • 1933-ம் ஆண்டு சென்ட்ரலில் இருந்து பேசின்பிரிட்ஜ் நோக்கி செல்லும் ரெயில்வே வழித்தடத்துக்கு மேலே யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டிருந்தது.
    • பேசின்பிரிட்ஜ் மற்றும் வால்டாக்ஸ் ரோடு பகுதியில் இருந்து எழும்பூர், புரசைவாக்கம் பகுதிக்கு செல்பவர்கள் இந்த பாலத்தின் வழியாக சிரமமின்றி விரைவாக சென்று விடலாம்.

    சென்னை:

    சென்னை யானைக் கவுனியில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ரெயில்வே மேம்பால பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

    இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து புதிய பாலம் திறக்கப்பட உள்ளது. 1933-ம் ஆண்டு சென்ட்ரலில் இருந்து பேசின்பிரிட்ஜ் நோக்கி செல்லும் ரெயில்வே வழித்தடத்துக்கு மேலே யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டிருந்தது. வலது புறத்தில் பேசின் பிரிட்ஜ் டிப்போவையும் இடது புறத்தில் சால்ட் சரக்கு கூடத்தையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த இந்த மேம்பாலத்தை புதுப்பித்து புதிதாக கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. பழமையான பாலத்தால் ரெயில்கள் பாலத்துக்கு கீழே செல்வதில் பல்வேறு இடையூறுகள் இருந்து வந்தன. தற்போது புதிய பாலப்பணிகள் 90 சத வீதத்துக்கும் மேல் முடிவடைந்து விட்டதால் ரெயில்கள் பாலத்துக்கு கீழே கடந்து செல்லும் போது, இனி சிரமம் இன்றி வேகமாக கடந்து செல்ல முடியும்.

    இந்த பாலப்பணிகளுக்காக யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலம் 2017-ம் ஆண்டு மூடப்பட்டு 4 சக்கரவாகனங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு முதல் இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் தடை போடப்பட்டது. 2020-ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் பாலத்தை புதுப்பித்து முழுமையாக கட்டும் பணிகள் தொடங்கின. இந்த புதிய பாலத்தில் பிரமாண்டமான 7 தூண்கள் பொருத்தப்பட்டு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. பாலத்தின் மேலே நடந்து செல்பவர்களுக்கான பாதையும் உருவாக்கப்பட்டன. ரூ.30.78 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலப்பணிகள் 95 சதவீதம் அளவுக்கு முடிந்திருப்பதாக ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து இன்னும் சில நாட்களிலோ அல்லது இந்த மாத இறுதியிலோ பாலத்தின் திறப்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பாலம் திறக்கப்பட்டுவிட்டால் பேசின்பிரிட்ஜ் மற்றும் வால்டாக்ஸ் ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். பேசின்பிரிட்ஜ் மற்றும் வால்டாக்ஸ் ரோடு பகுதியில் இருந்து எழும்பூர், புரசைவாக்கம் பகுதிக்கு செல்பவர்கள் இந்த பாலத்தின் வழியாக சிரமமின்றி விரைவாக சென்று விடலாம். வால்டாக்ஸ் சாலையில் நெரிசல் குறையும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    • மாநகராட்சி பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என பல பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
    • பல வருடங்களுக்கு முன்பு இரண்டு ரெயில்வே கேட்டுகளும் மூடப்பட்டன.

    ஆலந்தூர்:

    சென்னை மாநகராட்சி 12-வது மண்டலத்திற்கு உட்பட்ட ஆலந்தூர் பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

    அந்த பகுதியில் மேலும் மாநகராட்சி பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என பல பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

    50 வருடம் பழமையான ஆலந்தூர் மார்க்கெட்டும் உள்ளது. இதில் அரிசி மண்டி, காய்கறி மார்க்கெட், பழ மார்க்கெட், மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட், சமையல் மற்றும் எரிவாயு எண்ணைய் அங்காடிகள், ஜவுளி கடைகள் என பல்வேறு கடைகள் உள்ளது.

    இரண்டு பகுதிகளிலும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆதம்பாக்கம் மற்றும் ஆலந்தூரை இணைக்க முன்பு பரங்கிமலை ரெயில் நிலைய ரெயில்வே கேட் மற்றும் நிதி பள்ளி ரெயில்வே கேட் என இரண்டு ரெயில்வே கேட் இருந்தது. பல வருடங்களுக்கு முன்பு இரண்டு ரெயில்வே கேட்டுகளும் மூடப்பட்டன.

    அதில் பரங்கிமலை ரெயில் நிலைய கேட் நெடுஞ்சாலை துறை சார்பாக சுரங்க பாதையாக மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது இதில் கனரக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன.

    இந்த சுரங்கப்பாதை கீழ்கட்டளையில் இருந்து ஆலந்தூர் வழியாக கிண்டி செல்ல ஏதுவாக உள்ளது. தற்பொழுது இந்த சுரங்கபாதை பிரதான சுரங்க பாதையாக மாறி உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி, வேலை நேரமான காலை மற்றும் மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    அதிலும் குறிப்பாக ஆதம்பாக்கத்தில் இருந்து கருணீகர் தெரு வழியாக சுரங்கப்பாதை செல்வதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

    மேலும் மூடப்பட்டிருந்த நிதி பள்ளி ரெயில்வே கேட் எல்.சி.-15 வழியை பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இதனால் அவ்வப்போது ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்தது.

    இதை அடுத்து ஆதம்பாக்கம் மற்றும் ஆலந்தூர் இரு பகுதி மக்களும் மூடப்பட்டிருந்த நிதி பள்ளி ரெயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இதனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2013-ம் ஆண்டு அப்போதைய சென்னை மாநகராட்சி இரு பகுதியை இணைக்க சுரங்கபாதை அமைக்க பூஜை போடப்பட்டது.

    இந்த பணி தொடங்குவதற்கு சென்னை மாநகராட்சி சார்பாக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 3 கோடி ரூபாய் ரெயில்வே துறைக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த பகுதியில் மெட்ரோ குடிநீர் ராட்சத பைப் இருப்பதால் சுரங்கபாதை அமைவதற்கு வாய்ப்பு இல்லை என குடிநீர் வாரிய மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து சுரங்கப்பாதை திட்டம் மாற்றப்பட்டு மேம்பாலம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த மேம்பாலத்திற்கு சாய் தள மேம்பாலம் என்றும் பெயரிடப்பட்டது. இந்த மேம்பாலத்தில் இலகுரக வாகனங்களான ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் பயன்படுத்து வதற்காக கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் உட்பட அனைவரும் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒரு சில காரணங்களுக்காக மேம்பாலம் கட்டும் பணிகள் காலதாமத மானது. பின்பு 2016 அ.தி. மு.க. ஆட்சியில் சென்னை மாநகராட்சி உட்கட்டமைப்பு இல்லாததால் (கவுன்சிலர்கள் இல்லை) இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டது .

    தற்போது எல்.சி.-15 ரெயில்வே கேட் முழுவதுமாக மூடப்பட்டு ஆதம்பாக்கம் மற்றும் ஆலந்தூர் இரு பக்கத்திலும் சுமார் 12 அடி உயரத்திற்கு சுற்றுச் சுவர் கட்டப்பட்டுள்ளது. இதனால் ரெயிலில் அடிபட்டு உயிரிழப்புகள் தடுக்கப்பட்டாலும் பொது மக்கள் மிகவும் சிரமமடைந்து உள்ளனர்

    ஆதம்பாக்கத்தில் இருந்து ஆலந்தூர் செல்ல ஒரே வழியான பரங்கிமலை சுரங்கப் பாதை வழியாக தான் செல்ல வேண்டும்.

    இதனால் ஆதம்பாக்கத்தில் இருந்து ஆலந்தூர் செல்ல குறைந்தது மூன்று கிலோ மீட்டரில் இருந்து அதிகபட்சம் ஐந்து கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதனால் இரு பகுதி மக்களும் சிறிய வாகனங்கள் செல்லும் சாய்தள மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கையை வைத்தனர். ஆனால் இலகுரக வாகனங்கள் இல்லாமல் பாதசாரிகள் மட்டும் செல்லும் மேம்பாலமோ, சுரங்கபாதையோ வேண்டாம் என்று பொது மக்கள் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

    அதற்கு காரணம் பாத சாரிகள் மட்டும் பயன் படுத்தும் மேம்பாலம் அல்லது சுரங்கபாதையில் பிச்சைக்காரர்கள் மற்றும் சாலையில் வசிப்பவர்கள் அதன் இருபுறமும் ஆக்கிரமித்து விடுகின்றனர்.

    மேலும் மாலை நேரங்களில் பள்ளி மாணவிகள் உட்பட பெண்கள் தனியாக நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.

    ஏனென்றால் ஏற்கனவே ஆலந்தூர் ஆசர்கானாவில் இருந்து ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் எதிரே உள்ள பேருந்து நிலையத்திற்கு செல்ல பாத சாரிகளுக்கான சுரங்கப்பாதை உள்ளது. அது தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குகையாக மாறி வருகிறது. இந்த சுரங்கப்பாதையில் பெண்கள் பகல் நேரங்களில் கூட தனியாக செல்வது இல்லை. இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக மிக குறைவு.

    அதனால் ஆதம்பாக்கம் -ஆலந்தூரை இணைக்கும் இந்த எல்.சி.15 ரெயில்வே கேட் பகுதியில் இலகுரக வாகனங்கள் செல்லும் வகையிலும் பொது மக்கள் ஓரமாக நடந்து செல்லும் வகையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இப்படி மேம்பாலம் அமைத்தால் அது மழைக் காலங்களிலும் பயனுள்ளதாக இருக்கும். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான இந்த கோரிக்கையை தற்பொழுது உள்ள அரசால் நிறைவேற்றப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

    • திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஆண்டிப்பட்டி என சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு உடுமலையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன
    • உடுமலையிலிருந்து பழனி மார்க்கமாக மதுரை, திருச்செந்தூர், சென்னை உள்பட பல நகரங்களுக்கு பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து பழனி செல்லும் சாலையில் பிரிந்து செல்லும் கொழுமம் ரோட்டில் அகல ெரயில்வே பாதை உள்ளது. இந்த வழியாக எஸ்.வி.புரம், கண்ணமநாயக்கனூர், உரல்பட்டி, மலையாண்டி கவுண்டனூர், பாப்பான் குளம், பெருமாள் புதூர், சாமராய பட்டி, குமரலிங்கம், கொழுமம், ருத்ராபாளையம், திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஆண்டிப்பட்டி என சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு உடுமலையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் உடுமலையில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ெரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். உடுமலையிலிருந்து பழனி மார்க்கமாக மதுரை, திருச்செந்தூர், சென்னை உள்பட பல நகரங்களுக்கு பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் அடிக்கடி ெரயில்கள் கடந்து செல்வதால் கேட் மூடப்பட்டு பல மணி நேரம் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, உடுமலையிலிருந்து தளி ரோட்டில் மேம்பாலம் கட்டும் போதே கொழுமம் ரோட்டிலும் மேம்பாலம் கட்ட வேண்டுமென பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை ெரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அகல ெரயில்வே பாதை அமைக்கப்பட்டதால் மக்களின் வசதிக்காக கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. அதே சமயம் உடுமலை- கொழுமம் ரோட்டில் ெரயில்வே மேம்பாலம் கட்டவும் ெரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    • கிளீனர் உடல் நசுங்கி சாவு
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    பீகார் மாநிலம், கான்புராவை சேர்ந்தவர் மோதிலால் குமார் (வயது 35).இவர் லாரி கிளினியராக வேலை செய்து வந்தார்.

    நேற்று மாலை சென்னையில் இருந்து லாரியில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை ஏற்றிக் கொண்டு பீகாரை சேர்ந்த டிரைவர் ஒருவர் லாரியை பெங்களூருக்கு ஓட்டி வந்தார்.

    இந்த லாரியில் மோதிலால் குமார் கிளீனராக இருந்தார்.

    இன்று அதிகாலை 2.30 மணி அளவில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தில் லாரி சென்று கொண்டு இருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரியின் பின்புறத்தில் லாரி மோதியது.

    இந்த விபத்தில் கிளீனியர் மோதிலால் குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் இருந்த மோதிலால் குமார் பிணத்தை மீட்டு பரிசோத னைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    லாரியை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
    • குருந்தன்கோடு மேற்கு ஒன்றியம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சீருடையில் கலந்து கொள்வது

    இரணியல் :

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பேரூர் செயலாளர்கள் கூட்டம் திங்கள்நகரில் நடந்தது. அவைத்தலைவர் ஆன்றோ சர்ச்சில் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முருகன், ரமணிரோஸ், விஜயன், ஏசு ரெத்தினராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். மாநில பொதுக் குழு உறுப்பினர் ஜாண்லீபன், பேரூர் செயலாளர்கள் சுஜெய் ஜாக்ஸன், சேவியர் ஏசுதாஸ், ராஜூலின் ராஜகு மார், சகாய கிறிஸ்துதாஸ், மாவட்ட பிரதிநிதிகள் ஜெய சீலன், வைகுண்டதாஸ் உட்பட பலர் கலந்துகொண்ட னர். நெய்யூர் பேரூராட்சி தலைவி பி.வி பிரதீபா நன்றி கூறினார்.

    கூட்டத்தில் இளைஞர் அணியினரை ஊக்குவிக்கும் வகையில் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோச னைகள் வழங்க குமரிக்கு வருகை தரும் இளைஞரணி செயலாளரும், அமைச்சரு மான உதயநிதி ஸ்டாலினின் நிகழ்ச்சியில் திரளான இளை ஞர்கள் கலந்துகொள்வது. டிசம்பர் 17-ந்தேதி சேலத்தில் நடைபெறும் மாநாட்டில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றியம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சீருடையில் கலந்து கொள்வது, போக்குவரத்து சுங்கச்சாவடி கட்டணத்தை பல மடங்கு உயர்த்திய மத்திய அரசுக்கு கண்டனம் தெரி வித்துக்கொள்வது, மந்தமாக நடந்து வரும் நெய்யூர்-பரம்பை ரெயில்வே மேம்பால பணியால் பல்வேறு விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே தண்டவாள விரிவாக்கம் மற்றும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க தென்னக ரெயில்வே துறையை கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் இடது புற பகுதியில், போக்குவரத்து தடைபடாமல் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.
    • தென்காசி செல்லும் இடதுபக்க பகுதியில் இரு வழிக்கான பாலம் முழுமையாக தொடங்கப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது.

    தென்காசி:

    நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை திட்டமானது ரூ. 430.71 கோடிகள் மதிப்பீட்டில் உலக வங்கி மற்றும் தமிழக அரசு நிதியில் செயல்படுத்தப்ப டுகிறது.

    ரெயில்வே மேம்பாலம்

    போக்குவரத்து அதிகம் நெருக்கடி கொண்ட பாவூர்சத்திரம் ரெயில்வே கேட்டில் மேம்பால பணிகள் தொடங்கி கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலம் 900 மீட்டர் நீளமும் 20மீட்டர் அகலமும் கொண்டது. இடது புறம் 22 பில்லர்களும், வலது புறம் 22 பில்லர்களும் சேர்ந்து மொத்தம் 44 பில்லர்களுடன் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.

    தற்போது நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் இடது புற பகுதியில், போக்குவரத்து தடை படாமல் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தண்டவாளத்திற்கு கிழக்கு பகுதியில் 13 பில்லர்களும், மேற்கு பகுதியில் 9 பில்லர்களும் அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.

    மாநில நெடுஞ்சாலைத்துறை

    தென்காசி செல்லும் இடதுபக்க பகுதியில் இரு வழிக்கான பாலம் முழுமை யாக தொடங்கப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது. தூண்களுக்கான அடித்தளம் அமைத்து, வட்ட வடிவிலான பில்லர் கான்கிரீட் மீது பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

    பொதுவாக தண்ட வாளத்திற்கு மேலே அமைய இருக்கும் பால பகுதிகளை ரெயில்வேதுறை செய்து வந்த நிலையில் பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகளை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறையே செய்து வருகிறது.

    வரைபடம்

    இது குறித்து குறும்பலா பேரியை சார்ந்த ராஜசேகர பாண்டியன் என்பவர் எழுத்து பூர்வமாக கேட்ட கேள்விக்கு நெடுஞ்சாலைதுறை அளித்த பதிலில், "பாவூர்சத்திரத்தில் அமைக்கப்படும் ரெயில்வே மேம்பாலத்தின் ரெயில்வே பகுதிக்கான வரைபடம், மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் ரெயில்வே பகுதியில் வேலை தொடங்கப்படும் என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது."

    இது குறித்து ராஜசேகர பாண்டியன் கூறியதாவது:- ரெயில்வே துறையின் அலட்சியம் காரணமாக பல்வேறு இடங்களில் ரெயில்வே மேம்பாலங்கள் தண்டவாளத்திற்கு மேற்பகுதியில் அந்தரத்தில் தொங்குகின்றன. பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பாலத்தை பொறுத்த வரை ரெயில்வே துறைக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் போதிய புரிந்துணர்வு, ஒருங்கி ணைப்பு இல்லை.

    வாகனங்கள் அணிவகுப்பு

    தற்போது ரெயில்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் ரெயில்வே கேட் அதிக முறை மூடப்படுவதோடு, வாகனங்கள் இருபுறமும் கிலோ மீட்டர் கணக்கில் அணிவகுத்து நிற்கின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா இதுகுறித்து கூறுகையில், சென்னையில் உள்ள ரெயில்வே முதன்மை பால பொறியாளரிடம், மதுரை ரெயில்வே கோட்ட பொறியாளரிடமும் பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால வரைபட அனுமதியை உடனடியாக வழங்குமாறு கோரிக்கை வைத்தோம். அதற்கு அவர்கள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் வரைபடங்களை வழங்காமலும் போதிய கால அவகாசம் தராததாலும் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாங்கள் கேட்கும் கூடுதல் தகவல்களையும் உடனடியாக வழங்கினால் வரைபட ஒப்புதல் வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம் என்றனர்.

    எனவே தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக ரெயில்வே துறைக்கு பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால வரைபடம் சம்பந்தமான போதுமான தகவல்களையும் கொடுத்து குறித்த நேரத்தில் ஒருங்கி ணைப்பு செய்து பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயில்வே கேட்டில் தினந்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.
    • கடந்த 2018-ம் ஆண்டு ரூ.55 கோடிசெலவில் மீஞ்சூர் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூர்,காட்டூர் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இதனை அரியன்வாயல் காட்டூர், தத்தைமஞ்சி, வாயலூர், திருவல்லவாயில் ஊரணம்பேடு, பழவேற்காடு, உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மருத்துவம், கல்வி, தொழில் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரெயில்வே கேட்டில் தினந்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.

    கும்மிடிப்பூண்டி-சென்னை மார்க்கம் மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் அதிகம் செல்வதால் ரெயில் வரும் நேரங்களில் மீஞ்சூர் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால் ரெயில்வே கேட்டில் இருந்து அரியன் வாயில் வரையிலும் மற்றும் திருவெற்றியூர் சாலை வரையிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு ரூ.55 கோடிசெலவில் மீஞ்சூர் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணி பாதி முடிந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளது. இதற்கான இடம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ரெயில்வே பணி முடங்கி இருப்பதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த 6 ஆண்டாக முடங்கி உள்ள மீஞ்சூர் ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மீஞ்சூர் காட்டூர் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் கதிர்வேல் தலைமை தாங்கினார். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்கக்கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    • குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
    • 44 ஆண்டுகள் போராடியும் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை

    கன்னியாகுமரி :

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பேரூர் செயலா ளர்கள் கூட்டம் திங்கள்ந கரில் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் ஆன்றோ சர்ச்சில் தலைமை தாங்கி னார். பொருளாளர் ஏசுரத்தினராஜ் வரவே ற்றார். செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா சிறப்பு விருந்தி னராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன், பேரூர் செயலா ளர்கள் ரெஜூலின் ராஜகுமார், சுஜெய்ஜா க்ஸன், சகாய கிறிஸ்துதாஸ், செல்வதாஸ், நெய்யூர் பேரூராட்சி தலைவர் பிரதீபா, மாவட்ட பிரதிநி திகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தலைமை கழகம் அறிவுறுத்தி உள்ளபடி கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் 23 அணிகளின் சார்பிலும் அந்தந்த அணி களுக்கு என வழங்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகளை ஒன்றி யம் முழுவதும் நடத்துவது.

    திங்கள்நகர்- அழகிய மண்டபம் மாநில நெடுஞ்சா லை நெய்யூர்-பரம்பை பகுதியில் மெது வாக நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பாலப்ப ணிகளையும், தண்டவாளம் குறுக்கே தாழ்வாக கட்டப்ப ட்டு உள்ள புதிய இரணியல் கால்வாய் தொட்டி ப்பாலத்தில் தண்ணீர் ஓடி செல்லும் வகையில் தொட்டி பாலத்தை தூக்கி உயர்த்த ரெயில்வே மற்றும் பொதுப்பணித்துறையை கேட்டுக் கொள்வது.

    நெய்யூர் பேரூராட்சி நெய்யூர் வருவாய் கிராமத்தி ற்குட்பட்ட கொக்கோடு, பழவந்தான்கோணம், கண்ணோடு, இலந்தவிளை, பாளையம், ஆலங்கோடு உள்ளிட்ட கிராமங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களை பிரிக்கி ன்ற வகையில் கொக்கோடு - பழவந்தான்கோணம் சாலை குறுக்கே நாகர்கோ வில் - திருவனந்தபுரம் ரெயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், நோயாளிகள், வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள், ஆலயம், கோவில்களுக்கு சென்று வரும் பக்தர்கள் என தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த தண்டவாள ங்களை தாண்டி செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லை என்றால் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டும். இதனால் நேரவிரயம், பணவிரயம் ஏற்படுகிறது. இதற்கு ஒரே தீர்வான ரெயில்வே மேம்பா லம் அமைக்க இப்பகுதி மக்கள் தண்டவாளம் அமைக்கப்பட்ட 1979-ம் ஆண்டிலிருந்தே முயற்சிகள் எடுத்து வருகின்றனர். 44 ஆண்டுகள் போராடியும் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. எனவே மத்திய அரசும், ரெயில்வே நிர்வாகமும் கொக்கோடு - பழவந்தான்கோணம் இணைப்பு ரெயில்வே மேம்பாலத்தை உடனடியாக அமைக்க முன்வர வேண்டும். காலதாமதம் செய்தால் அப்பகுதி மக்களை ஒன்றிணைத்து தி.மு.க. தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்ட முடிவில் திங்கள்நகர் பேரூர் செயலாளர் சேவியர் ஏசுதாஸ் நன்றி கூறினார்.

    • பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே நெய்யூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பரம்பை கண்ணோடு கொக்கோட்டிலிருந்து, சரல்விளை, பாளையம், பழவண்டான்கோணம் ஆகிய ஊர்கள் செல்ல ெரயில் வழித்தடத்தில் மேம்பாலம் அமைத்து தரும்படி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நெய்யூர் பேரூராட்சி தலைவர் பிரதீபா, கவுன்சிலர்கள் ராஜகலா, ஹரிதாஸ், வக்கீல் ஜெகன் ஆகியோர் தலைமையில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதனையடுத்து இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன், குழித்துறை ெரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இஜி மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ரெயில்வே அதிகாரிகளுக்கு பல ஆண்டுகளாக மனு பலமுறை அனுப்பி கண்டு கொள்ளாத நிலை காணப்படுகிறது.
    • 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் போராட்டம் நடத்த வேண்டும் என்று குவிந்தனர்.

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே நெய்யூர் பேரூ ராட்சிக்குட்பட்ட பரம்பை கண்ணோடு கொக்கோட்டி லிருந்து சரல்விளை பாளை யம், பழவண்டான்கோணம் ஆகிய ஊர்கள் செல்ல ரெயில் வழித்தடத்தில் மேம்பாலம் அமைத்து தரும்படி மாவட்ட கலெக்டர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகளுக்கு பல ஆண்டுகளாக மனு பலமுறை அனுப்பி கண்டு கொள்ளாத நிலை காணப்படுகிறது.

    இந்த நிலையில் நெய்யூர் பேரூராட்சி தலைவர் பிரதீபா, வார்டு கவுன்சிலர்கள் ராஜகலா ஹரிதாஸ், வக்கீல் ஜெகன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் போராட்டம் நடத்த வேண்டும் என்று குவிந்தனர்.

    இதனை அடுத்து இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார், சப்-இன்ஸ் பெக்டர் முத்து கிருஷ்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய மேம்பாலம் கட்டுவது குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகள் இடம் மனு அளித்து தீர்வு காண அறிவுரை கூறினார். இதனை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

    ×